வங்கக்கடலில் உருவான நிலம் புயலினால் வல்வெட்டித்துறைப்பகுதியில் கடும் மழை(படங்கள் இணைப்பு)
கடந்த மூன்று நாட்களாக வல்வெட்டுத்துறை பகுதிகளில் கடும் மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
சீறிய சான்டி புயலால் நிலைகுலைந்த அமெரிக்கா- ரூ1.08 லட்சம் கோடி சேதம்!
நியூயார்க்: அமெரிக்காவை உலுக்கி எடுத்து வரும் சான்டி புயலால் ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 62 லட்சம் பேர் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல், கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியிருக்கிறது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள்…
இந்தியாவில் புலிகளுக்கு எதிரான தடை உத்தரவு குறித்து நவம்பர் 3ம் திகதி இறுதி விசாரணை
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி முன்வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி இறுதி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இந்த விசாரணையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளரும், சட்டத்தரணியுமான வை.கோ. புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி வாதாடுவார் என எதிபார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று…
இலங்கை கடலில் மூழ்கி வியட்நாம் கப்பல் விபத்து: 18 பேர் மீட்பு நால்வர் மாயம்
நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று (30) மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில் 22 பேர் பயணத்த நிலையில் கப்பலின் தலைவன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச்சென்ற சாய்கோன் குயீன் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது….
இந்திய நம்பிக்கை என்ற ஒற்றைச் சிதையில் நின்றுகொண்டு, எமக்கு நாமே தீ மூட்டிக்கொள்ள முடியாது!
முள்ளிவாய்க்கால் பேரழிவும், சிங்கள தேசத்தின் மாறாத இன மேலாதிக்க வன்முறையும் ஈழத் தமிழர்களது அரசியல் களத்தை இன்னொரு திசை நோக்கி நகர்த்தி வருகின்றது. தற்போது நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சீனத் தூதரின் சந்திப்பும் அத்தகையதொரு நிர்ப்பந்தம் காரணமாக அமைந்தது எனலாம். காலா காலமாக இந்தியாவின் கரங்களைப் பற்றியபடியே தம் எதிர்கால நம்பிக்கையை வளர்த்துக்கொண்ட ஈழத்…
2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது. இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம்…
நிஜம் – கீழே வைக்க முடியவில்லை, முனைவர் எம்,எச், ஜவாஹிருல்லா
ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம் என்ற நூலை சகோதரர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் என்னிடம் அணிந்துரைக்காக வழங்கியபோது சில நிமிடங்கள் திகைத்து விட்டேன் ,காரணம் இந்த நூலில் பக்கங்கள் அதிகம் . .தொடர்ச்சியான வேலை பளுவிற்கு இடையிலும் இதனை உடனடியாக ,முழுமையாக படித்து அணிந்துரை வழங்க முடியுமா ? என்று எண்ணினேன் . ஆனால் கையில் கையில் எடுத்தேன்…
முல்லைத்தீவில் மழையால் 19,785 பேர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையை அடுத்து 52 கிராம அலுவலகர் பிரிவுகளில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் இன்று தெரிவித்தார். இவர்களில் 503 குடும்பங்களைச் சேர்ந்த 1,721 பேர் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர்…
ஈழத் தமிழர்கள் மீது நடந்தேறுவது இனப்படுகொலை: பிரென்சு பாராளுமன்றில் எம்மவர்கள் (படங்கள் இணைப்பு)
இலங்கைத் தீவில் ’ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இன அழிப்பே’ என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனை மையமொன்று கருத்தினை வெளியிட்டுள்ளது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை நோக்குவதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பில் பிரான்சின்…
முல்லையின் தொடரும் கடும் மழை! தற்காலிக முகாம்களில் மழையில் மக்ளுடன் சிறீதரன் MP! (படங்கள்,வீடியோ இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் உட்புகுந்ததால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். தாழ் நிலப்பகுதிகளிலிருந்து வெளியேறிய பொது மக்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சடைந்துள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக முல்லைத்தீவின் இரணைப்பாலை,…
சான்டிப் புயலுக்கு 12 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்(வீடியோ இணைப்பு)
அமெரிக்காவின் நியூஜேர்ஸி கடற்கரையோரப் பகுதியைத் தாக்கிய சன்டி புயலில் சிக்கி 12 பேர் உயிழந்துள்ளனர். சான்டிப் புயலால் நியூயோர்க் உட்பட முக்கிய மாநகரங்கள் ஸ்தம்பித்துள்ளன. போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள், பங்குச்சந்தை என நாட்டின் முக்கியமானவைகள் மூடப்பட்டுள்ளது. மேற்கு வேர்ஜினியா முதல் வட கரோலினா மற்றும் கனெக்டிக்கட் பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் சான்டிப் புயலில் சிக்கி…
பலம் குறைந்த சூறாவளி முல்லைத்தீவுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ளது : வளிமண்டலவியல் திணைக்களம்
எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது….
நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு – காணொளி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது….
சிறீலங்காவில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐ.நா. அமைப்பு நடத்தும் விசாரணையில் பாமக பங்கேற்கும் – ராமதாஸ்
சிறீலங்காவில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐ.நா. அமைப்பு நடத்தும் விசாரணையில் பாமக பங்கேற்கும் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீது போர்குற்ற விசாரணை…
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் புயல்.
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது மேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் புயல், (Tropical cyclone, Category 2) யாழ்பாணத்தின் வடக்குப் பக்காமாக, யாழ்பாணத்திலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படங்களில் நகரும் புயலின் இருவேறு ‘எதிர்பார்க்கப்படும் பாதைகள்’ காட்டப்படுள்ளன. எவ்வாறாயினும் யாழ்பாணத்தில்,…





