பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பது ஏன்? – சம்பந்தன் விளக்கம்!

இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டை பகிஷ்­க­ரிப்­ப­தற்கு முடிவு செய்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­ம­லையில் புத்திஜீவி­க­ளோடு நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இதைத் தெரி­வித்தார். பொது நல­வாய நாடு­களின் உச்­சி­மா­நாடு சம்­பி­ர­தா­ய­மு­றையில் நடை­பெ­று­வ­தற்­கான ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பொது­ந­ல­வாய நாடு­களைப் பொறுத்­த­வரை சில தத்­து­வங்­களை, கோட்­பா­டு­களை வகுத்து அந்த அமைப்பில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற நாடுகள் கடைப்­பி­டிக்க வேண்­டு­மென்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. அது அவர்­க­ளது கொள்கை.அந்த கோட்­பா­டு­களை பின்­பற்­றாத நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் பல்­வேறு நட­வ­டிக்­கைகள், பல்­வேறு காலங்­களில் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இது ஒரு புது­வி­ட­ய­மல்ல. இலங்­கையைப் பொறுத்­த­வரை ஐ.நாடு மனித உரிமைப் பேர­வையின் 2012, 2013 ஆம் ஆண்­டு­களில் இரண்டு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்தத் தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டையில் பொது­ந­ல­வாய கொள்­கையின் அடிப்­ப­டையில் இலங்கை அரசு பல்­வேறு கட­மை­களை நிறை­வேற்ற வேண்­டு­மென்ற கருத்து இருந்­தது. இதனால் பல தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.

பார­தூ­ர­மான மனித உரிமை மீறல் நடை­பெற்று இருக்­கின்­றன.ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் யுத்­தத்தின் பின்னும் அதன்­போதும் காணாமற் போயி­ருக்­கி­றார்கள்.அவர்கள் குடும்­பத்­தினர் அலைந்து திரிந்து அந்த விட­யத்­துக்கு தீர்வைக் கேட்டு பல­வி­த­மான கஷ்­டங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.இது விடயம் சம்­பந்­த­மாக இலங்­கை­ய­ர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மாக செயற்­ப­ட­வில்லை, பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைப்­பே­ர­வையின் வேண்­டு­கோ­ளின்­படி விசு­வா­ச­மான உள்­நாட்டு விசா­ரணை எதுவும் நடை­பெ­ற­வில்லை. பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களே நடந்­துள்­ளன.

திரு­மலை படு­கொலை

திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் கொலை செயப்­பட்ட விடயம் சம்­பந்­த­மா­கவும் மூதூரில் 17 அரச சார்­பற்ற நிறு­வனத் தொண்­டர்கள் கொலை செயப்­பட்­டது சம்­பந்­த­மா­கவும் இச் சம்­ப­வங்கள் நடை­பெற்று ஏழு ஆண்­டுகள் முடி­வ­டைந்து விட்­ட­போ­தும்­கூட, எவ்­வி­த­மான முடிவும் இன்னும் காணப்­ப­ட­வில்லை. காரணம் இலங்கை அர­சாங்கம் நேர்­மை­யா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­கவும் செயற்­ப­ட­வில்லை. தற்­போது இவ்­வி­ட­யங்­களை ஒரு முறை­யாக முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வது மிகக் கடி­ன­மான விட­ய­மாக அமையும். அதற்கு மேல­தி­க­மாக பல்­வேறு விட­யங்­களில் இந்­நாட்டில் உள்­ள­வர்­களும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னரும் இலங்கை அரசு மீது நம்­பிக்­கையை இழந்­தி­ருக்­கின்­றார்கள்.

அதி­கா­ரத்தில் இருந்த பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கா அவ­ச­ர­மாக பதவி நீக்கம் செய்யப்­பட்டார். பதவி நீக்கம் செய்யப்­பட்­ட­மைக்கு அடிப்­படைக் காரணம் 13ஆவது அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை குறைப்­ப­தற்கு, திவி­நெ­கும சட்­டத்தின் மூலம் எடுக்­கப்­பட்ட சில முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கா­மை­யே­யாகும்.

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்கா தலை­மையில் திவி­நெ­கும சட்ட மூலம் சம்­பந்­த­மாக இரண்டு தீர்­வுகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. ஒன்று மாகா­ண­ச­பைக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் அதி­கா­ரங்­களை நீக்­கு­வ­தாக இருந்தால் அந்த சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்பு முதலில் ஒவ்­வொரு மாகா­ண­ச­பையின் கருத்து அறி­யப்­ப­ட­வேண்­டும்­மென்று கூறப்­பட்­டி­ருந்­தது. அக்­கா­ர­ணத்­தினால் மேற்­படி சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க தாமதம் ஏற்­பட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கு அந்த சட்ட மூலம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டது.

இரண்­டா­வது விடயத் தீர்ப்பில், வட­மா­கா­ணத்தில் மாகாண சபை இல்­லாத கார­ணத்­தினால் அந்த சட்­டத்­துக்கு வட­மா­காண ஆளுநர் சம்­மதம் கொடுத்தார். மாகாண சபையின் சார்­பாக மக்­களால் தெரிவு செய்யப்­பட்ட சபைதான் சம்­மதம் வழங்­கலாம். ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஆளு­நரால் அவ்­விதம் சம்­மதம் கொடுக்க முடி­யாது என முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான உச்ச நீதி­மன்ற நீதி­ப­திகள் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தார்கள். இந்த காரணம் நிமித்­தமே பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க பதவி நீக்கம் செய்யப்­பட்டார். அவ­ச­ர­மா­கவும் கேவ­ல­மா­கவும் இந்த செயற்­பாடு நடந்­தது.

இன்று நீதி­மன்­றங்­களின் சுதந்­தி­ரத்தில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை. ஒரு சர்­வா­தி­கா­ரப்­போக்கில் நாடு செல்­வதைத் தடுக்­க­வேண்­டு­மாக இருந்தால் நீதி­மன்றம் சுதந்­தி­ர­மாக செயற்­பட வேண்டும். அந்த ஒழுங்கு இங்கு இல்­லாத கார­ணத்­தினால் இந்த நாட்டு மக்­க­ளுக்கு அர­சாங்­கத்தில் நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் நம்­பிக்­கை­யில்லை. நாட்டில் பத்­தி­ரிகைச் சுதந்­தி­ர­மில்லை. சட்­டத்தின் ஆட்­சி­யில்லை, உண்­மை­யான ஜன­நா­ய­க­மே­யில்லை. 17ஆவது அர­சியல் சாசன திருத்தம் இரத்துச் செயப்­பட்­டதன் கார­ண­மாக சுதந்­திர தேர்தல் ஆணைக்­குழு, சுதந்­திர பொதுச் சேவை ஆணைக்­குழு, பொலிஸ் சேவைக்­குழு, மனித உரி­மைக்­குழு ,சுதந்­தி­ர­மான ஊழல் விசா­ர­ணைக்­குழு, நீதி­யா­ணைக்­குழு போன்ற இவை­யொன்றும் இலங்­கையில் இல்லை.

உச்ச நீதி­மன்­றுக்கும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கும் 17 ஆவது அர­சியல் சாச­னத்தின் கீழ் நிய­மிக்­கப்­பட கூடி­ய­வர்கள் அர­சியல் சாச­னத்­தி­னு­டைய குழுவின் மூலம் நிய­மிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள். இந்த நிய­ம­னங்கள் எல்­லா­வற்­றையும் இன்று ஜனா­தி­பதி தான் விரும்­பி­ய­படி செய்து கொண்­டி­ருக்­கின்றார். ஆகவே, இன்று தேர்தல் நடை­பெ­றலாம். ஆனால் தேர்­தல்கள் முறை­யாக ஒழுங்­காக நடை­பெ­று­வ­தற்கு எவ்­வித உறு­தி­யான நிலைப்­பா­டு­க­ளு­மில்லை. வடக்­கிலும் கிழக்­கிலும் நடந்த தேர்­தல்­களில் இடம்­பெற்ற இராணுவ பங்­க­ளிப்பு அநே­க­மாக எல்­லோ­ருக்கும் தெரிந்­ததே.

இதன் கார­ண­மா­கவே இலங்­கை­ய­ர­சாங்கம் பொது­ந­ல­வாய நாடு­களின் கோட்­பா­டு­களை, தத்­து­வங்­களை மீறி நடந்த காரணத்தினாலேயே பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழு

இதேபோன்றதொரு நிலைதான் தெரிவுக்குழு விவகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. உலகத்தை ஏமாற்றுவதற்காகவும் எங்களை திசை திருப்புவதற்காகவும் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என அரசாங்கம் அழைப்பு விடு க்கின்றது.

அரசு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடு த்து தீர்வை வழங்கத்தயாராக இரு க்கின்றபட்சத்தில் எங்களை அழைக்குமா னால் கூட்டமைப்பினராகிய நாங்கள் தெரிவு க்குழுவுக்கு செல்லக் காத்திரு க்கின்றோம். தொடர்ந்தும் தெரிவுக்குழு மூலமாக எங்களை ஏமாற் றலாமென்று அரசோ அதன் தலைவர்களோ கருதுமானால் அதற்கு நாம் தயாராக இருக்கவில்லை என்ற செய்தியைச் சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *