லண்டனில் இன்று நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியின் காணொளி
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும், 65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேசசுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும், இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டப் போரணி இன்று பி.ப 2:30 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு பி.ப 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இப் பேரணியில் கலந்துகொண்ட்அ மக்கள் முன்னிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழீழ ஆதரவாளருமான பாரதிராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அதில்… லண்டனின் வரலாற்றுப் புகழ் மிக்க மாபெரும் சதுக்கத்தில் இவ்வாறானதொரு ஈழத் தமிழர்களின் போராட்ட நிகழ்வில் பங்கேற்பதில்பாவப்பட்ட பாரதிராஜாவாகிய நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டதானது திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த மாபெரும் இனப்படுகொலையைச் செய்தபாதகனை உலகின் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும்.
எமக்கு தமிழீழம் நிச்சயம் கிடைக்கும். அது உறுதி. தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர் போராட்டங்களையும், அதனை தொடர்ந்து நடாதிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களையும் நாங்கள் பாராட்ட வேண்டும்.