பிரித்தானியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாம் இலங்கை அதை வெளிக்கொண்டு வருமாம்?!

பிரித்தானியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாம் இலங்கை அதை வெளிக்கொண்டு வருமாம்?!

இலங்கையில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் வந்திருந்த பொழுது நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும், நாம் வழங்கிய மரியாதை அணிவகுப்பையும் அவர் ஏற்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது இலங்கை அரசு.


அத்துடன் தமது நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் பேச முடியாது என தெரிவித்துள்ளதோடு, பிரித்தானியா மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கை வெளிக்கொண்டு வரும் எனவும் இலங்கை பிரித்தானியாவுக்கு எச்சரிக்கும் தெனியில் அறிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பிரித்தானியாவின் பதில் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை

Leave a Reply

Your email address will not be published.