திருமலையில் சிங்களக் காடையர்கள் வன்முறை! தமிழ் விவசாயிகள் படுகாயம்!

கங்­கு­வேலிப் பகு­தியில் வய­லுக்குச் சென்ற விவ­சா­யிகள், கும்பல் ஒன்­றினால் கோட­ரியால் தாக்­கப்­பட்டு படு­கா­ய­முற்ற நிலையில் மூதூர் வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். கங்­கு­வேலி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நான்கு விவ­சா­யி­களே இவ்­வாறு தாக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.இது பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது:-

கங்­கு­வே­லியைச் சேர்ந்த விவ­சா­யிகள் தங்­க­ளுக்குச் சொந்­த­மான படு­காடு ஊற்று என்னும் பகு­தியில் இருக்கும் வயல்­க­ளுக்கு கடந்த திங்­கட்­கி­ழமை மாலை சென்­ற­போது தெகி­வத்தை என்ற கிரா­மத்தைச் சேர்ந்த ஆயுதம் தாங்­கி­யோரும் மக்­களும் கோடரி, கத்தி, பொல்லு போன்ற ஆயு­தங்­களைக் கொண்­டு­வந்து வயலில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த விவ­சா­யி­களை கடு­மை­யாக தாக்­கி­யுள்­ளனர்.

இதனால் வைர­முத்து கிருஷ்­ண­மூர்த்தி, சிதம்­ப­ரப்­பிள்ளை துள­சி­நாதன், மாணிக்கம் கோண­லிங்கம், ஆறு­முகம் தேவ­ம­னோ­கரன் ஆகிய நாலு பேரும் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

மூன்று விவ­சா­யிகள் சிறு காயங்­க­ளுடன் தப்பி ஓடி­யுள்­ளனர். இது­பற்றி கருத்துத் தெரி­வித்த பட்­டித்­திடல் விவ­சாய சங்கத் தலைவர் கூறி­ய­தா­வது:-

சுமார் 900 ஏக்கர் காணி­களை தெகி­வத்­தையைச் சேர்ந்த பெரும்­பான்மை மக்கள் கைய­கப்­ப­டுத்தி விட்­டார்கள். இது­பற்றி நாம் முறை­யிட்­டுள்ளோம்.

1956ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வயற்­கா­ணி­களில் விவ­சாயம் செய்­து­வ­ரு­ப­வர்கள் கங்­கு­வேலி விவ­சா­யிகள். 1985ஆம் ஆண்­டுக்குப் பின்னர் வன்­செயல் கார­ண­மாக செல்­ல­மு­டி­ய­வில்லை. 2002ஆம் ஆண்டு மீண்டும் குறித்த வயல்­க­ளுக்குச் சென்று விவ­சாயம் செய்­து­வந்தோம். 2006ஆம் ஆண்­டுக்குப் பின் செல்­ல­மு­டி­ய­வில்லை. 2009ஆம் ஆண்டு தெகி­வத்தை மக்கள் பூர்­வீ­க­மாக எமக்குச் சொந்­த­மான காணி­களை கைய­கப்­ப­டுத்தி விட்­டார்கள். நாங்கள் முறை­யிட்­டதன் பேரில் மூதூர் பிரதேச செயலாளரும் பொலிஸாரும் வயல்களில் நெற்பயிர் செய்வதற்குரிய எழுத்துமூல அனுமதியைத் தந்ததன் பேரில் வயல்களுக்குச் சென்ற எமக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.